INDIAN 7

Tamil News & polling

செமி ஃபைனலில் இங்கிலாந்தை பழி தீர்த்த இந்தியா.. 15 வருட சாதனையுடன் ஃபைனலுக்கு தகுதி!

By E7 Tamil 28 ஜூன் 2024 12:51 AM
Nature

ஐசிசி 2024 டி20 உலக கோப்பையில் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கயானா நகரில் இரண்டாவது செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் கிரிக்கெட் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 9 ரன்னில் போல்ட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் 14 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினார். அதில் கேப்டன் ரோகித் சர்மா 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 57 (39) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அசத்திய சூரியகுமாரும் அரை சதத்தை நழுவ விட்டு 47 (36) ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 23 (13) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 17 (9) அக்சர் படேல் 10 (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 171/7 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் சரவெடியாக 23 (15) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்தார். அப்போது பிட்ச் ஸ்லோவாக இருப்பதை உணர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா வலது கை பேட்ஸ்மேனான பட்லருக்கு எதிராக இடதுகை ஸ்பின்னரான அக்சர் படேலை கொண்டு வந்தார்.

அந்த மாஸ்ட ஸ்ட்ரோக் வலையில் விழுந்த பட்லர் ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய பிலிப்ஸ் சால்ட் 5 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார். அப்போது அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவை கோல்டன் டக் அவுட்டாக்கிய அக்சர் படேல் அதற்கடுத்த ஓவரில் மறுபுறம் தடுமாறிய மொய்ன் அலியையும் 8 (10) ரன்னில் காலி செய்து மாயாஜாலம் நிகழ்த்தினார்.

அதனால் 46/4 என சரிந்த இங்கிலாந்துக்கு அடுத்ததாக சாம் கரண் 2, லிவிங்ஸ்டன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21* ரன்கள் எடுத்தும் 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட்டாக்கிய இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்து அணியை இந்தியா பழிதீர்த்தது.


அத்துடன் 15 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வென்ற அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடைசியாக 2009 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்து இலங்கை வெற்றி பெற்றிருந்தது.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கத்தாரில் ஆசியக் கோப்பை 2025 ரைசிங் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை சூப்பர் ஓவரில் தோற்கடித்த வங்கதேசம் இறுதிப்

Image தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி



Whatsaap Channel


சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி


திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட சிரமம்

திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட


ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு


அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே கேட்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே


அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்

அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை அதிமுக அண்ணாமலை Chennai Annamalai தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாஜக Tamil Nadu திருமாவளவன் MK Stalin ADMK BJP சீமான் தவெக மாநாடு AIADMK Thirumavalavan TTV Dhinakaran இந்திய அணி மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam TVK Conference தமிழக வெற்றிக்கழகம் AMMK வானிலை ஆய்வு மையம் indian cricket team Seeman Northeast Monsoon தீபாவளி Sengottaiyan PMK அன்புமணி ராமதாஸ் மழை Anbumani Ramadoss Rain நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன் திருச்செந்தூர் Thoothukudi VCK காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் Tirunelveli தவெக விஜய் தென்காசி பாமக GetOut Stalin M.K. Stalin பிரதமர் மோடி அமரன் வானிலை IMD TVK Vijay விசிக நடிகை கஸ்தூரி Edappadi Palaniswami பாலியல் தொல்லை திருநெல்வேலி Nellai Congress விடுமுறை நெல்லை மதுரை தமிழகம் கோலிவுட் திமுக அரசு இந்தியா GetOut Modi Ind vs Nz Udhayanidhi Stalin Nainar Nagendran சட்டசபை தேர்தல் Ajith rain தனுஷ் Tiruchendur வாஷிங்டன் சுந்தர் கைது Washington Sundar தூத்துக்குடி Heavy Rain