ஐசிசி 2024 டி20 உலக கோப்பையில் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கயானா நகரில் இரண்டாவது செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் கிரிக்கெட் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 9 ரன்னில் போல்ட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் 14 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினார். அதில் கேப்டன் ரோகித் சர்மா 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 57 (39) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அசத்திய சூரியகுமாரும் அரை சதத்தை நழுவ விட்டு 47 (36) ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 23 (13) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 17 (9) அக்சர் படேல் 10 (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 171/7 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் சரவெடியாக 23 (15) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்தார். அப்போது பிட்ச் ஸ்லோவாக இருப்பதை உணர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா வலது கை பேட்ஸ்மேனான பட்லருக்கு எதிராக இடதுகை ஸ்பின்னரான அக்சர் படேலை கொண்டு வந்தார்.
அந்த மாஸ்ட ஸ்ட்ரோக் வலையில் விழுந்த பட்லர் ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய பிலிப்ஸ் சால்ட் 5 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார். அப்போது அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவை கோல்டன் டக் அவுட்டாக்கிய அக்சர் படேல் அதற்கடுத்த ஓவரில் மறுபுறம் தடுமாறிய மொய்ன் அலியையும் 8 (10) ரன்னில் காலி செய்து மாயாஜாலம் நிகழ்த்தினார்.
அதனால் 46/4 என சரிந்த இங்கிலாந்துக்கு அடுத்ததாக சாம் கரண் 2, லிவிங்ஸ்டன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21* ரன்கள் எடுத்தும் 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட்டாக்கிய இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்து அணியை இந்தியா பழிதீர்த்தது.
அத்துடன் 15 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வென்ற அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடைசியாக 2009 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்து இலங்கை வெற்றி பெற்றிருந்தது.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!