ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற்று 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஐசிசி தொடர்களில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை இந்திய அணியில் ரோகித் சர்மா கொண்டு வந்துள்ளார். அதை பின்பற்றி 2023 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் எதிரணிகளை அடித்து நொறுக்கி இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றது. இந்நிலையில் விராட் கோலி பதவி விலகியதும் ரோகித் சர்மாவை தாம் தான் இந்தியாவின் கேப்டனாக செயல்பட சம்மதிக்க வைத்ததாக முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐபிஎல் தொடரில் மும்பை கழற்றி விட்ட ரோகித் சர்மா இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்துவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கை வட்டமாக வந்துள்ளது. 6 மாதத்திற்கு முன்பாக மும்பை அணியின் கேப்டனாக இல்லாத அவர் தற்போது இந்திய அணியை தோல்வியே சந்திக்காமல் உலகக் கோப்பை ஃபைனலுக்கு அழைத்து வந்துள்ளார்”
“இதுவரை விளையாடிய 2 உலகக் கோப்பையில் அவர் தோல்வியை சந்திக்காமல் இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதுவே அவருடைய தலைமையின் தரத்தை காட்டுகிறது. அதற்காக நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக இருக்க விரும்பாத போது நான் பிசிசிஐ தலைவராக இருந்தேன். அப்போது அவரை கேப்டனாக நியமிக்க நிறைய நேரம் தேவைப்பட்டது”
“ஏனெனில் அவர் அதற்கு தயாராக இல்லை. அதனால் நாங்கள் அவரை கேப்டனாக்க நிறைய தள்ள வேண்டியிருந்தது. தற்போது அவருடைய தலைமையில் இந்திய அணி முன்னேறுவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் உலகக்கோப்பை வெல்ல உங்களுக்கு 8 – 9 போட்டிகள் போதும். ஆனால் ஐபிஎல் வெல்ல 16 – 17 போட்டிகள் வேண்டும். இருப்பினும் உலகக் கோப்பை வெல்வதில் அதிக கௌரவம் உள்ளது”
“அதை ரோகித் இம்முறை செய்வார் என்று நம்புகிறேன். 7 மாதத்திற்குள் அவர் 2 ஃபைனலில் தோல்வியை சந்தித்தால் பார்பர்டஸ் கடலில் குதித்து விடுவார். இருப்பினும் அணியை அற்புதமாக வழி நடத்தும் அவர் நாளைய ஃபைனலில் நன்றாக அசத்துவார் என்று நம்புகிறேன். வெற்றிக்கு இந்தியா சுதந்திரத்துடன் விளையாட வேண்டும். ஐசிசி தொடர்களை வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். அது இந்தியாவுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!