Tamil News & POLLING

 

முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!

1 year ago 14 ஜூலை 2024 05:26 PM | views : 151
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது.

ஹராரே நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக முதல் ஓவரின் முதல் பந்தை கேப்டன் சிக்கந்தர் ராசா வீசினார். ஃபுல் டாஸாக வந்த அந்த பந்தை இந்தியாவின் ஜெய்ஸ்வால் சிக்ஸராக பறக்க விட்டார்.

ஆனால் அதை வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து வீசியதால் நோபால் அறிவிக்கப்பட்டு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஜெய்ஸ்வால் நேராக சிக்ஸர் அடித்து ஒரே பந்தில் 12 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 டி20 கிரிக்கெட்டில் முழு பெற்ற நாடுகளுக்கு இடையேயான ஒரு போட்டியின் முதல் பந்திலேயே அதிக ரன்கள் (12) அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

அவரைத் தவிர்த்து முழு அந்தஸ்து பற்ற நாடுகளின் வேறு எந்த பேட்ஸ்மேனும் இப்படி முதல் பந்தில் 10 ரன்கள் கூட அடித்ததில்லை. அதே போல அவருடைய 12 ரன்கள் மற்றும் நோபாலுக்கு வழங்கப்பட்ட 1 ரன்னையும் சேர்த்து இந்தியா முதல் பந்தில் 13 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் பந்திலேயே அதிக ரன்கள் (13) குவித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.

இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் முதல் பந்திலேயே 10 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 3வது பந்திலேயே 12 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்து அபிஷேக் ஷர்மா 14 ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் கில் 13 ரன்களில் நடையை கட்டினார்.


அடுத்து வந்த ரியன் பராக் தடுமாற்றமாக விளையாடி 22 (24) ரன்னில் அவுட்டானார். ஆனால் எதிர்புறம் அசத்தலாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரை சதமடித்து 58 (45) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் சிவம் துபே 26 (12), ரிங்கு சிங் 11* (9) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 167/6 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முசர்பானி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK TTV DHINAKARAN TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் MK STALIN தமிழகம் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் சீமான் ரஜினிகாந்த் PMK கனமழை இந்திய அணி INDIAN CRICKET TEAM CONGRESS UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் அமமுக NELLAI SEEMAN கொலை EDAPPADI PALANISWAMI OPS மதுரை தென்காசி கள்ளக்காதல் நெல்லை COIMBATORE தமிழ்நாடு திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS கோவை MADURAI திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங் திருமாவளவன் THIRUMAVALAVAN AJITH நயினார் நாகேந்திரன் நாம் தமிழர் கட்சி NORTHEAST MONSOON விடுமுறை பாலியல் தொல்லை தீபாவளி தேவர் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION தமிழக அரசு ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI