40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வசந்தகால வாழ்க்கை
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.
2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.
20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.
21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.
22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.
23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.
24. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!