POLLING FLAMES

 

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் சென்னை மைதானம் கைகொடுக்குமா?

1 year ago 18 செப்டம்பர் 2024 02:26 AM | views : 225
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அதில் சமீபத்தில் பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்தது போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேசம் சவால் விடுத்துள்ளது. ஆனால் கடந்த 12 வருடங்களாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

எனவே சவால் விடுத்து வரும் வங்கதேசத்தை துவம்சம் செய்து இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.

கடந்த 1916இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் இந்தியாவின் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த மைதானமாகும். தற்போது 38000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றில் 34 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 34 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 15 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

11 போட்டிகள் டிராவில் முடிந்தன. 1 போட்டி சமனில் முடிந்தது. வங்கதேசத்தை முதல் முறையாக இப்போது தான் சென்னையில் இந்தியா எதிர்கொள்கிறது. மேலும் ஒட்டுமொத்த வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 11 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2 டிராவை சந்தித்துள்ளது. சென்னை மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா : 759-7 இங்கிலாந்துக்கு எதிராக, 2016

சென்னை சேப்பாக்கத்தில் இப்போட்டி நடைபெறும் 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய வெப்பமான சூழ்நிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

பொதுவாக சேப்பாக்கத்தில் சுழலுக்கு சாதகமான கருமண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகும். ஆனால் டிசம்பரில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்தியா தயாராக இப்போட்டியில் செம்மண்ணால் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலையில் நல்ல வேகம் பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே முதல் 2 – 3 நாட்கள் சூழ்நிலையை அறிந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே காலகட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் சவாலை கொடுப்பார்கள். ஆனால் போட்டி செல்ல செல்ல ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். 347, 337, 243, 154 என்பது இங்கு 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும்.


வரலாற்றில் இங்கே 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 10 முறை 2வதாக பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா வன்னியர் ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை