டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் முதல்வர் நாற்காலியில் அதிஷி அமர்ந்துள்ளார். பக்கத்தில் இன்னொரு காலி நாற்காலி போடப்பட்டுள்ளது.
அவரது பதிவில், "தனது சகோதரர் ராமர் வனவாசத்திற்கு சென்றபோது எந்த வலியுடன் அயோத்தியை பரதர் ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ராமரின் செருப்பை வைத்து பரதர் எப்படி 14 ஆண்டுகள் ஆட்சி செய்தாரோ, அதே போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S