சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.
இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இதன்படி தலா ரூ. 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலங்களில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி.யும், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ,`15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரை இதற்கு மேலும் சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த வழக்கை நடத்திமுடிப்பதற்கும் காலதாமதம் ஆகும்.
எனவே இரண்டையும் கருத்தில்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும், செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் வெவ்வேறானது.முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைப் போல செந்தில் பாலாஜி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்றார்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற உண்மையும்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!