சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.
இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இதன்படி தலா ரூ. 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலங்களில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி.யும், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ,`15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரை இதற்கு மேலும் சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த வழக்கை நடத்திமுடிப்பதற்கும் காலதாமதம் ஆகும்.
எனவே இரண்டையும் கருத்தில்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும், செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் வெவ்வேறானது.முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைப் போல செந்தில் பாலாஜி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்றார்.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!