Tamil News & polling
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்தவகையில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பணியிடங்களில் 507 காலிப்பணியிடங்கள் உள்ளன.
அதேபோல், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் ஆகிய குரூப்-2ஏ பணியிடங்களில் ஆயிரத்து 820 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்கான முதல்நிலை போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. தேர்வுக்கான, விடைக்குறிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதேபோல், குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress