INDIAN 7

Tamil News & polling

தேசத்திற்கு தந்தைகள் கிடையாது : கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு

03 அக்டோபர் 2024 04:13 AM | views : 71
Nature

அக்டோபர் 2-ந்தேதியான நேற்று காந்தி பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரியின் 120-வது பிறந்தநாளையொட்டி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரானாவத் மரியாதை செலுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "தேசத்திற்கு தந்தைகள் கிடையாது, மகன்கள் உள்ளனர். பாரத அன்னையின் இந்த மகன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கங்கனா ரனாவத் இவ்வாறு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தி நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதை மனதில் வைத்துதான் கங்கனா ரனாவத் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது.

ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்தில் இருந்து விலகி நிற்பதாக பா.ஜ.க. தெிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Like
3
    Dislike
3



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்