INDIAN 7

Tamil News & polling

குவைத்தில் பரிதவித்த தமிழர்கள் 7 பேர் மீட்பு

By E7 Tamil 18 அக்டோபர் 2024 08:18 AM
Nature

திருச்சி:

பெரம்பலூர், மதுரை, கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஆர்.வினேஷ், ஆர்.திபாக்கரன், கே.ரிஸ்வந்த், கே.திருமாவளவன், டி.ச ரவணன், கே.வெங்கடேஷ், அ.அசேன் ஆகிய 7 வாலிபர்கள் தனியார் நிறுவனம் மூலம் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர்.

இதற்காக வாணியம்பாடியை சேர்ந்த சபீர்கான் என்ற ஏஜெண்டிடம் ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம், 2 லட்சம் என கொடுத்து கடந்த ஜூலை மாதம் குவைத்துக்கு சென்ற அவர்களுக்கு டிரைவர் வேலை கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. முதலில் 8 மணி நேரம் வேலை என சொல்லியதில் 18 மணி நேரம் வேலை கொடுக்கப்பட்டது

இதில் திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய வினேஷ், சரவணன், வெங்கடேஷ், அசேன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் சரியான தூக்கம் இல்லாமலும், சாப்பிட வழி இல்லாமலும் தவித்த 7 பேரும் தப்பி வந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டு தங்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே 7 தமிழர்கள் நிலையை அறிந்த தொழிலதிபர் ஹைதர் அலி 7 பேருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்ததோடு தனது நிறுவனத்தில் வேலையும் தருவதாக கூறினார். இந்திய தூதரகத்தில் பணிபுரியும் தென்காசி ஷாஜகான் என்பவர் எடுத்த கடும் தொடர் முயற்சியில் பாதிக்கப்பட்ட 7 தமிழர்களின் பாஸ்போர்ட்களை அவர்களது ஸ்பான்சரை தூதரகம் வரவழைத்து பெற்று கொடுத்தார்.

7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Whatsaap Channel


திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி.


கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன்


நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள


திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்


உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத விஷயம்!

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத



Tags

விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK சென்னை கனமழை பாஜக தவெக திருமாவளவன் வடகிழக்கு பருவமழை Chennai அண்ணாமலை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் தவெக மாநாடு MK Stalin தீபாவளி AIADMK வானிலை ஆய்வு மையம் PMK தமிழக வெற்றிக்கழகம் Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran மழை இந்திய அணி indian cricket team மு.க.ஸ்டாலின் AMMK Edappadi Palaniswami தமிழக அரசு Tamil Nadu Rain விசிக பாமக செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தவெக விஜய் பிரதமர் மோடி rain தமிழ்நாடு வேட்டையன் Ajith அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rajinikanth VCK PM Modi IMD Udhayanidhi Stalin GetOut Stalin Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli ராமதாஸ் இந்தியா TVK Vijay நடிகை கஸ்தூரி Ind vs Nz காங்கிரஸ் GetOut Modi Vettaiyan Heavy Rain மதுரை M.K. Stalin திமுக அரசு Ramadoss தனுஷ் கோலிவுட் கைது ரஜினிகாந்த் திருச்செந்தூர் டிடிவி தினகரன் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் விடுமுறை