சென்னை:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயதுடைய என்ஜினீயர் ஒருவர், 'ஆன்லைன்' செயலிகளில் மூழ்கி இருந்தார்.
அப்போது அழகிகள் படங்களுடன் 'டேட்டிங்' செயலிகள் அவரை ஈர்த்தன. அவர் ஒரு செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் ஒரு அழகியின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அந்த அழகி தனது கவர்ந்து இழுக்கும் காந்த குரலால், என்ஜினீயர் இளைஞரை கட்டிப் போட்டுவிட்டார்.
'டேட்டிங்' அழகியின் தேன் குரலில் அவரும் மயங்கினார். இதனால் அழகியின் நினைவில் இளைஞர் மூழ்கிப்போனார். அழகியை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அவர், கடந்த 22-ந்தேதி அன்று 'டேட்டிங்' அழகியை தனது இல்லத்துக்கு வரவழைத்தார்.
அழைப்பை ஏற்று வந்த அழகியும் அவருக்கு உல்லாச விருந்து படைத்தார். உல்லாசத்தில் சொக்கிப்போன அந்த இளைஞர், அழகிக்கு தனது வீட்டை சுற்றி காட்டினார்.
அழகி சென்றவுடன், சுயநினைவுக்கு வந்த இளைஞர், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார். பீரோவை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தன. தன்னை சபல வலையில் வீழ்த்தி டேட்டிங் அழகி கைவரிசை காட்டி இருப்பதை அவர் உணர்ந்தார்.
இளைஞருக்கு பதற்றம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெட்கப்பட்டார்.
நகை முக்கியமா? மானம் முக்கியமா? என்று அவரது மனதில் கேள்விகள் எழுந்தன. நகைத்தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த அழகியின் புகைப்படம், செல்போன் எண் போன்ற விவரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.
சபல வலையில் வீழ்ந்த என்ஜினீயருக்கு உல்லாச விருந்து படைத்து நகையை அபேஸ் செய்த 'டேட்டிங்' அழகியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த அழகி விரைவில் கைதாவார் என்று தெரிகிறது. அப்போதுதான் அந்த அழகியிடம் எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளார்கள்? என்ற விவரம் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!