INDIAN 7

Tamil News & polling

தங்க நாணயங்களை பறிகொடுத்த என்ஜினீயர்- டேட்டிங் அழகி கைவரிசை

25 அக்டோபர் 2024 02:33 AM | views : 69
Nature

சென்னை:

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயதுடைய என்ஜினீயர் ஒருவர், 'ஆன்லைன்' செயலிகளில் மூழ்கி இருந்தார்.

அப்போது அழகிகள் படங்களுடன் 'டேட்டிங்' செயலிகள் அவரை ஈர்த்தன. அவர் ஒரு செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் ஒரு அழகியின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அந்த அழகி தனது கவர்ந்து இழுக்கும் காந்த குரலால், என்ஜினீயர் இளைஞரை கட்டிப் போட்டுவிட்டார்.

'டேட்டிங்' அழகியின் தேன் குரலில் அவரும் மயங்கினார். இதனால் அழகியின் நினைவில் இளைஞர் மூழ்கிப்போனார். அழகியை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அவர், கடந்த 22-ந்தேதி அன்று 'டேட்டிங்' அழகியை தனது இல்லத்துக்கு வரவழைத்தார்.

அழைப்பை ஏற்று வந்த அழகியும் அவருக்கு உல்லாச விருந்து படைத்தார். உல்லாசத்தில் சொக்கிப்போன அந்த இளைஞர், அழகிக்கு தனது வீட்டை சுற்றி காட்டினார்.

அழகி சென்றவுடன், சுயநினைவுக்கு வந்த இளைஞர், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார். பீரோவை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தன. தன்னை சபல வலையில் வீழ்த்தி டேட்டிங் அழகி கைவரிசை காட்டி இருப்பதை அவர் உணர்ந்தார்.

இளைஞருக்கு பதற்றம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெட்கப்பட்டார்.

நகை முக்கியமா? மானம் முக்கியமா? என்று அவரது மனதில் கேள்விகள் எழுந்தன. நகைத்தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த அழகியின் புகைப்படம், செல்போன் எண் போன்ற விவரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

சபல வலையில் வீழ்ந்த என்ஜினீயருக்கு உல்லாச விருந்து படைத்து நகையை அபேஸ் செய்த 'டேட்டிங்' அழகியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அழகி விரைவில் கைதாவார் என்று தெரிகிறது. அப்போதுதான் அந்த அழகியிடம் எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளார்கள்? என்ற விவரம் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Like
3
    Dislike
1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்