’’சிகரெட் கேட்ட போது கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த மன்னார்குடி சேர்ந்த திமுக பிரமுகர்கள், பெட்டிக்கடைக்காரர் பெண்ணின் துப்பட்டாவை பிடி்து இழுத்து தகாத வார்த்தைகள் பேசியவர்களுக்கு அடி உதை’’
தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (48). இவர் மேலவஸ்தாச்சாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் ஐயங்கார் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மன்னார்குடி நகர திமுக இளைஞர் அணி செயலாளர் சுதாகர் (42), திமுக விவசாய தொழிலாளர் பாண்டவர் (54), மாணவர்கள் நகர துணை செயலாளர் முருகேசன் (48) உள்ளிட்ட 8 பேர் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற விருந்திற்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாலை 4 மணி அளவில், சூரக்கோட்டையிலுள்ள, ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் அமைந்துள்ள ஐயங்கார் டீக்கடையில் டீ குடித்தனர். அப்போது அருகில் இருந்த டீக்கடை நடத்தி வருகின்ற ரேவதியுடம், சிகரெட் கேட்டுள்ளனர். ஆனால் மற்ற வாடிக்கையாளர்கள் இருந்ததால், சிகரெட் கொடுக்க தாமதமானது.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவை சேர்ந்தவர்கள், ரேவதியை தகாத வார்த்தைகள் பேசி திட்டி, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினர். இச்செயலை தட்டிக்கேட்ட பேக்கரி உரிமையாளர் ஆனந்தன் அவரது மகன் மட்டும் ஊழியர்களை கடுமையாக தாக்கி அவர் கடையை சூறையாடினர். இச்சம்பவத்தில் பெட்டிக் கடைக்காரரின் மகன் வசந்தன் (24) ஊழியர்கள் திருப்பதி (25), பாஸ்கர் (24) வாடிக்கையாளர் கார்த்திகேயன் (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அருகிலுள்ளவர்கள் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சூரக்கோட்டை கிராம மக்கள், அப்பகுதியில் திரண்டு, திமுகவை சேர்ந்த 6 பேரை மடக்கி பிடித்து அடித்து உடைத்து உடைத்தனர். இதில் இருவர்கள் தப்பியோடி காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.
சூரக்கோட்டை மக்கள் அடி உதைத்தில், திமுக பிரமுகர்கள் சுதாகர், முருகேசன், பாண்டவர், இசையரசன் (39) பிரபு (27), சுரேஷ் (32), 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை ரேவதி அளித்த புகாரின் பேரில் திமுக சேர்ந்த 6 பேர் மீதும் , திமுக பிரமுகர் ஆண்டவர் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீதும், தஞ்சை தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார். உடல்நலைக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மகன் மு.க.முத்து பிறந்த சில மணி நேரங்களிலேயே உடல்நலக் குறைவால்
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்? என சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும்
திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜர் ஏசி பயன்படுத்தியதை குறிப்பிட்டு கருத்தை தெரிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் காமராஜர் ஏசி பயன்படுத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், கூட்டணியை உடைக்கும் வகையில் தற்போது சர்ச்சை ஒன்று
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: * தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும். * கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன். * அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். * அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால்
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!