INDIAN 7

Tamil News & polling

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

By E7 Tamil 12 மார்ச் 2025 10:58 AM
Nature

நடிகை செளந்தர்யா விபத்தின் காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் மூத்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்பிருப்பதாகவும் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக கொடிகட்டிப் பறந்தார் செளந்தர்யா. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் இறந்தனர்.

செளந்தர்யா உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நடிகர் மோகன்பாபுதான் அவரது மரணத்துக்குக் காரணம் என்று தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் காவல்துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருக்கிறார்.


ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் செளந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும் சிட்டிமல்லு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்பாபு, சௌந்தர்யாவையும் அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்தரித்துவிட்டதாகவும் சிட்டிபாபு குற்றம்சாட்டியுள்ளார். செளந்தர்யா இறந்த பிறகு அந்த நிலத்தை, நடிகர் மோகன்பாபு ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகையை கட்டியுள்ளதாகவும் அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும் என்றும் சிட்டிமல்லு தன் புகார் கடிதத்தில் கூறியிருக்கிறார்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image புதுடெல்லி, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மக்களின் மனதை திருடியிருக்கிறோம்.

Image பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில்



Whatsaap Channel


சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்கள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு


டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான்


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை Chennai அதிமுக தமிழக வெற்றிக் கழகம் கனமழை அண்ணாமலை Annamalai MK Stalin திருமாவளவன் ADMK Tamil Nadu பாஜக AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு BJP இந்திய அணி முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran Seeman indian cricket team வானிலை ஆய்வு மையம் TVK Conference Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் AMMK தமிழ்நாடு தமிழக வெற்றிக்கழகம் Sengottaiyan PMK தீபாவளி Northeast Monsoon மு.க.ஸ்டாலின் மழை Anbumani Ramadoss காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் Rain பிரதமர் மோடி நயினார் நாகேந்திரன் VCK தென்காசி பாமக தவெக விஜய் Thoothukudi Tirunelveli விசிக உதயநிதி ஸ்டாலின் GetOut Stalin அமரன் நடிகை கஸ்தூரி IMD TVK Vijay திருச்செந்தூர் பாலியல் தொல்லை மதுரை Edappadi Palaniswami டிடிவி தினகரன் வானிலை Congress தமிழகம் விடுமுறை தூத்துக்குடி Heavy Rain திமுக அரசு இந்தியா சட்டசபை தேர்தல் M.K. Stalin Ajith கோலிவுட் திருநெல்வேலி Ind vs Nz தனுஷ் GetOut Modi rain Washington Sundar வாஷிங்டன் சுந்தர் Nainar Nagendran கைது