இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் போது இந்திய அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் மிடில் ஆர்டரில் நான்காவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா ஓரளவு சிறப்பான இன்னிங்க்ஸை விளையாடி இந்திய அணியை நிலைப்படுத்தினார்.
இந்த போட்டியில் 32 பந்துகளை சந்தித்து விளையாடிய திலக் வர்மா 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 26 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும் அக்சர் பட்டேலுடன் இணைந்து இந்திய அணியின் இன்னிங்சை நிலைப்படுத்தினார் என்று கூறவேண்டும்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 4 ரன்கள் அடித்த போது சர்வதேச டி20 போட்டிகளில் அபிஷேக் ஷர்மாவின் சாதனையை மிஞ்சி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது திலக் வர்மா 4 ரன்கள் கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 1000 ரன்களை எட்டினார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக மிக இளம் வயதில் 1000 ரன்களை டி20 போட்டிகளில் அடித்த வீரராக அபிஷேக் ஷர்மா இருந்த வேளையில் அவரது சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியின் போது சர்வதேச டி20 போட்டிகளில் தனது 25 ஆவது வயதில் 1000 ரன்களை கடந்திருந்தார்,
இவ்வேளையில் தற்போது 23 வயதே ஆன திலக் வர்மா அபிஷேக் ஷர்மாவின் சாதனை முறியடித்து டி20 போட்டிகளில் இந்திய வீரராக மிகக் குறைந்த வயதில் 1000 ரன்களை கடந்த வீரராக தனது பெயரை பதிவு செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.