Tamil News & POLLING

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; மூன்றாவது பெரிய கட்சி யார் தெரியுமா?

4 years ago 13 அக்டோபர் 2021 07:06 AM | views : 157
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: '9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகப் பயனாளிகளுக்கு முழுமையாகச் சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும். மக்கள் பங்கேற்கிற ஜனநாயக அமைப்பாக இருக்கிற ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.


அதே நேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்குப் படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாகச் செயல்படுகிற பாஜகவுக்கும், பாமகவுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றிப் பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS சீமான் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி PMK ரஜினிகாந்த் கனமழை INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION CONGRESS பாமக அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி கைது SEEMAN KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் அமமுக கொலை NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN மதுரை தென்காசி TAMIL ACTRESS OPS திருமாவளவன் திருநெல்வேலி COIMBATORE கள்ளக்காதல் தமிழ்நாடு கோவை தீபாவளி பாலியல் தொல்லை TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் நாம் தமிழர் கட்சி தமிழக அரசு ஓபிஎஸ் MADURAI THOOTHUKUDI விடுமுறை AJITH ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் NORTHEAST MONSOON தேவர் டிரெண்டிங் டாப் நியூஸ் ELECTION COMMISSION வன்னியர்