Tamil News & polling
பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைசம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பாக டாக்டர் சுப்பையாவுக்கும், ஆசிரியரான பொன்னுசாமி தரப்புக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுப்பையா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து போலீஸார் ஆசிரியர் தம்பதிகளான பொன்னுசாமி, அவரது மனைவி மேரிபுஷ்பம், அவர்களது மகன்கள் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ், பேசிலின் குடும்ப நண்பரான வழக்கறிஞர் வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட கபடி வீரர் ஏசுராஜன் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் முருகன், டிப்ளமோ பட்டதாரியான செல்வ பிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பலர் கைதான நிலையில், பலர் சரண்அடைந்தனர். ஐயப்பன் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக அப்ரூவராக மாறினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, குற்றம் சாட்டப்பட்ட பொன்னுசாமி அவரது மகன்களான வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் மற்றும் பேசிலின்நண்பரான வழக்கறிஞர் வில்லியம்,அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட முருகன், செல்வப்பிரகாஷ் ஆகிய 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி விசாரணை நீதிமன்றம், இந்தவழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையைதள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே
அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த
ராகுல் காந்தி மெஸ்ஸியை
பள்ளியில் மது அருந்திய 6 மாணவிகள்: நெல்லையில்
விஜய் Vijay TVK DMK தவெக சென்னை திமுக அதிமுக Chennai அண்ணாமலை கனமழை தமிழக வெற்றிக் கழகம் Annamalai MK Stalin Tamil Nadu பாஜக திருமாவளவன் ADMK தவெக மாநாடு சீமான் Thirumavalavan TTV Dhinakaran BJP AIADMK இந்திய அணி தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை AMMK Seeman வானிலை ஆய்வு மையம் indian cricket team மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக்கழகம் Tamilaga Vettri Kazhagam TVK Conference செங்கோட்டையன் தீபாவளி PMK Northeast Monsoon Sengottaiyan மழை Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் Rain தென்காசி VCK Thoothukudi காங்கிரஸ் நயினார் நாகேந்திரன் பாமக தவெக விஜய் டிடிவி தினகரன் Tirunelveli விசிக தமிழகம் Congress நெல்லை TVK Vijay நடிகை கஸ்தூரி வானிலை Edappadi Palaniswami Nellai விடுமுறை GetOut Stalin திருநெல்வேலி மதுரை IMD பாலியல் தொல்லை பிரதமர் மோடி உதயநிதி ஸ்டாலின் அமரன் திருச்செந்தூர் தனுஷ் Heavy Rain GetOut Modi Ind vs Nz திமுக அரசு கோலிவுட் M.K. Stalin இந்தியா rain வாஷிங்டன் சுந்தர் Ajith கைது சட்டசபை தேர்தல் Nainar Nagendran தூத்துக்குடி Washington Sundar