டிடிவி தினகரன் அவர்கள் அன்றைக்கு எழுப்பிய சந்தேகம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய இத்தகைய புரிதலோ, பக்குவமோ, தெளிவோ எதுவுமில்லாமல் பச்சை சுயநலத்தோடு உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து, சாதி மாச்சர்யங்கள் இன்றி அண்ணன்- தம்பிகளாக பழகி வந்த மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பையும், பகைமையையும் பழனிசாமி ஏற்படுத்தினார்.
அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாக வன்னியர் உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்தது என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்த எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என செந்தமிழன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக கழக துணைபொதுச்செயலாளர் செந்தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வாக்குவங்கி அரசியலுக்காக அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலமாக முந்தைய பழனிசாமி அரசு கொண்டுவந்து, தற்போதைய ஸ்டாலின் அரசும் ஆராயாமல் செயல்படுத்திய 10.5% உள் இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
இந்த இருவரின் சுயநலத்தாலும், கபட நாடகத்தாலும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி கல்லூரிகளில் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவச்செல்வங்கள் மட்டுமல்ல; திடீர் இட ஒதுக்கீட்டால் இடம் கிடைக்காமல் போன 148 பிரிவிலுள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதுதான் கண்ட பலன். இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் சேர்ந்தவர்களுக்கும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதே நிலைமைதான்.