சின்னத்திரை ரசிகர்ளுக்கு நாள்தோறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதில் சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியலில் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சீரியல் நடிகர்கள் நடிகைகளின் வாழ்வில் நடக்கும் நிஜ நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆராவாரத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. இதில் சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும், நிஜவாழ்வில் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.
அந்த வகையில் சீரியலில் வில்லியாக நடித்து நிஜத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஃபரீனா ஆசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்த இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை எல்லாம் பாராட்டாக எடுத்துக்கொண்ட ஃபரீனா தனது சிறந்த வில்லத்தனத்தை அந்த கேரட்க்டருக்கு கொடுத்தார். இவரின் நடிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிககள் அதிகரிக்க தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நல்ல செய்தியை கேட்டு பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், அடுத்த சில நாட்களில் இவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட போட்டோஷூட் பலரிடமிருந்து எதிர்மறையான விமாசனங்களை பெற்றது. இந்த விமர்சனங்களுக்கு அவரும் பதிலடி கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் கர்ப்பமாக உள்ளதால் சீரியலில் இருந்து வெளியே உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனாலும் தொடர்ந்து நடித்து வந்த ஃபரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா சீரியலில் சிறைக்கு செல்வது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ஃபரீனா ஆசாத்-க்கு தற்போது அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்குவாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.