INDIAN 7

Tamil News & polling

பசும்பொன் தேவர் மீசை மறைந்த ரகசியம் !!!

By E7 Tamil 10 நவம்பர் 2022 04:38 AM
Nature

பசும்பொன் தேவர் மீசை மறைந்த ரகசியம் !!!

ஆண்களுக்கு மீசை தான் அழகு என்பது தமிழர்களின் கலாச்சாரம் !

தமிழர்களின் வீரத்தை பிரதிபலிப்பதும் இந்த அழகான மீசை தான் !

நட்பை உயிரினும் மேலாக எண்ணி வெள்ளையனை எதிர்த்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத் துரையின் உயிரைக் காப்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்து வாளேந்தி போராடி தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணத்தை ஏற்றுக் கொண்ட அந்த மருது சகோதரர்களின் அடையாளமே அந்த அழகான மீசை தான்.

தனி மன்னனாக போர்க்களத்தில் களம் கண்டு வெள்ளையர்களை அடித்துத் துரத்திய அந்த புலித் தேவனுக்கும் பெருமை சேர்த்தது அந்த முறுக்கு மீசை தான்.

இப்படி தமிழர்களின் வீரத்தின் அடையாளமே அற்புதமான அந்த மீசை தான் இன்னும் சொல்லப் போனால் தமிழர்களின் அழகை மெருகூட்டிக் காட்டுவதே அந்த இளமை ததும்பும் இனிய மீசை தான்.

வாலிப பருவத்திலே பசும்பொன் தேவருக்கும் இப்படியொரு அழகான மீசையும் இளமையை பிரதிபலிக்கும் செழுமையான முடியழகும் இருந்தது உண்மை தான்.

இப்படி அரும்பு மீசையும் அழகான கிராப்புடன் காணப்பட்ட பசும்பொன் தேவர் மகன் ஒரு நாள் திடீரென மீசைக்கு விடை கொடுத்துவிட்டார்.

அழகான முடியுடன் கிராப்பு வைத்திருந்த தனது முடி அழகை மாற்றி பாகவதர் சிகை அலங்காரத்திற்கு தன்னை திடீரென மாற்றிக் கொண்டார்.

ஏன் இந்த மாற்றம் ? பலருக்கும் இதற்கான விடை தெரியவில்லை பசும்பொன் திருமகனாரும் இது பற்றி வாய் திறந்து எதுவும் பேசவில்லை வாய் மூடி மௌனமாகவே இருந்தார்.

சில ஆண்டுகள் கழித்து பசும்பொன் திருமகனார்க்கு நெருங்கிய ஒருவர் தைரியத்தை வர வழைத்து அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

உங்கள் அழகுக்கு அழகு சேர்த்ததே! உங்களது அழகான மீசையும் உங்கள் முடியழகும் தான்.

அப்படியிருக்கும்போது ஏன் அந்த அழகான மீசையை எடுத்து விட்டு கிராப்பு முடியை பாகவதர் முடியாக மாற்றினீர்கள்?
என்று கேட்டார். அப்போது தான் திருமகனார் தனது மௌனத்தைக் கலைத்தார்.

ஒரு முறை தேவர் திருமகனார் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு தனது நெருங்கிய நண்பர் ஏற்பாடு செய்திருந்த ஒரு வீட்டில் தங்கினார். அப்போது அழகான மீசையும் சுருட்டுத் தலை முடியும் அவரிடம் இருந்தது. இரவு 10 மணியளவில் அவர் அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்த போது அங்கே ஓர் அழகான கேரளா இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். திருமகனார் தங்கியிருந்த அந்த வீட்டைச் சேர்ந்தவள் அந்தப் பெண்.

அந்தப் பெண் திருமகனாரைப் பார்த்துச் சொன்னாள்! நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவளது ஆசையை தெரிவித்தார்.
அப்போது தேவர் திருமகனார் சொன்னார் அம்மா! நான் ஒரு ஆன்மீகவாதி!

எனக்கு திருமண வாழ்க்கை என்பது கிடையாது ! எல்லாப் பெண்களையும் நான் பராசக்தி வடிவமாக பார்ப்பவன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் ! என்று அவளுக்கு அறிவுரை கூறி அவளை அனுப்பி வைத்தார்.. மனம் மாறிய அந்தப் பெண் புறப்பட்டுச் செல்லும் போது அவளை மீண்டும் அழைத்து திருமகனார் ஒரு கேள்வி கேட்டார்.

அம்மா ! என்னை நீ ஏன் விரும்பினாய்? என்னிடம் உன்னை கவர்ந்த அம்சம் என்ன? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் உங்கள் அழகான மீசையும் உங்கள் முடியழகும் தான் 'என்னைக் கவர்ந்தது' என்றாள் அந்தப் பெண்.

உடனே மறுநாளே தனது மீசையை எடுத்து விட்டு வாலிப முடி ஸ்டைலை மாற்றி வயோதிக பாகவதர் ஸ்டைலுக்கு தனது முடியை மாற்றியமைத்தார்.

அதற்கு திருமகனார் விளக்கம் கூறும்போது உண்மையான பிரம்மச்சாரியம் என்பது நாம் ஒரு பெண்ணை பார்க்காமல் இருப்பது மட்டுமல்ல! வேறு எந்தப் பெண்ணும் தன்னைப் பார்க்காமல் இருக்குமளவிற்கு தன் அழகைக் குறைத்துக் கொள்பவன் தான் உண்மையான பிரமச்சாரி. அதனால் தான் நமது முனிவர்களெல்லாம் நீண்ட தாடி வளர்த்து எந்தப் பெண்ணும் தன் மீது விருப்பப் படக்கூடாது என்பதற்காக தான் அழகாக தோற்றமளிக்காமல் காட்சியளித்தனர். இது தான் பசும்பொன் திருமகனார் தன் மீசையை துறந்ததற்கான காரணம் பற்றி கொடுத்த விளக்கம்.

தவத்திலே மிகவும் வலிமையான விசுவாமித்ரரே மேனகை என்ற நடன அழகி தன் எதிரே வந்தவுடன் அவள் அழகில் மயங்கி தனது தவத்தை கலைத்து விட்டுச் சென்றதாக இதிகாசம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது அழகான பெண் தன்னைத் தேடி வந்தும் அவளுக்கு அறிவுரை கூறி அவளை திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவள் விரும்பிய தனது அழகையே மாற்றி அமைத்துக் கொண்ட ஒரு அபூர்வ மனிதர் திருமகனார் அவர்கள்.

ஆனால் தனது கொள்கையை தேவர் திருமகனார் மற்றவர்களிடம் திணித்ததில்லை. மறைந்த மதிப்பிற்குரிய மூக்கையா தேவரின் நெருங்கிய நண்பர் எனது தந்தையார். என்னை அடிக்கடி அவரிடம் என் தந்தையார் பல முறை அழைத்துச் சென்றிருக்கிறார். திருமகனார்க்கு மிகவும் நெருக்கமானவர் திரு.மூக்கையா தேவர் அவர்கள் அப்போது அவர் சொன்ன விஷயம்.
"மற்றவர்கள் மீசை வைத்ததை திருமகனார் எப்போதும் எதிர்த்ததில்லை அதனால் தான் நானே மீசை வைத்திருக்கிறேன்!" என்பார்.
அதனால் நீங்கள் அனைவரும் அழகான மீசை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் எந்தத் தவறும் இல்லை காரணம் பெரிய மீசை தான் தமிழனின் கலாச்சாரம் ! தமிழர்கள் வீரத்தின் அடையாளம். தேவர் திருமகனாரும் அதை எதிர்த்ததில்லை. அவர் மீசையை துறந்ததற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

நன்றி !

இது போன்று நேதாஜி பசும்பொன் தேவர் திருமகனார் பற்றிய பல கட்டுரைகளும் சமுதாய விழிப்புணர்வை உருவாக்கும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவரும்.



Whatsaap Channel


Image விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும்,

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்