கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் முடிவெட்ட வந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக, மணிகண்டனின் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மணிகண்டன் முதலில் அவரது மகனுக்கு முடிவெட்டிய நிலையில், பின்னர் அவரது மகளுக்கு முடி வெட்டியுள்ளார். அப்போது, பணம் எடுப்பதற்காக அந்த பெண் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, மணிகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பெண் திரும்பி வந்தபோது சிறுமி அழுது கொண்டிருந்துள்ளார். இது குறித்து அவரிடம் தாய் விசாரித்தபோது, மணிகண்டன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!