டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவமனை முன்பாக எய்ட்ஸ் நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மனிதர்களை அச்சுறுத்தும் தீவிர நோயான எய்ட்ஸ் நோய் பற்றிய தீவிரத்தையும் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு முதல்முறையாக டிசம்பர் ஒன்றாம் தேதியை எய்ட்ஸ் தினமாக அறிவித்தது.
1998 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டிசம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை பிரச்சாரங்கள் மூலமும் ஊர்வலம் மூலமும் கலை நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பாக இன்று கல்லூரியின் உதவி மருத்துவ நிலை அலுவலர் ஈஸ்வரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து நுழைவாயில் இருந்து வளாகப் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனை வரை செவிலியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டிமருத்துவமனை முன்பாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!