லெக்கின்ஸ் அணிந்து வந்த ஆசிரியை திட்டிய தலைமை ஆசிரியர்.. பூதாகரமான ஆடை விவகாரம்!

By Admin | Published in செய்திகள் at டிசம்பர் 02, 2022 வெள்ளி || views : 194

லெக்கின்ஸ் அணிந்து வந்த ஆசிரியை திட்டிய தலைமை ஆசிரியர்.. பூதாகரமான ஆடை விவகாரம்!

லெக்கின்ஸ் அணிந்து வந்த ஆசிரியை திட்டிய தலைமை ஆசிரியர்.. பூதாகரமான ஆடை விவகாரம்!

கேரளாவில், பள்ளிக்கு லெக்கின்ஸ் சுடிதார் அணிந்து வந்த ஆசிரியையை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. “நீ இப்படி ஆடை அணிவதால் தான் அவர்கள் அப்படி செய்கிறார்கள்” நீ ஏன் இந்த ஆடையை அணிகிறாய், உனக்கு வேறு ஆடையே கிடைக்கவில்லையா? இதுபோன்ற விமர்சனங்களை நாம் நாள்தோறும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால், இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டுக்குத்தான் பதிலடி கொடுத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் இந்தி பாட ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சரிதா ரவீந்திரநாத். சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து பள்ளிக்கு சென்ற அவரை, தலைமை ஆசிரியை ரம்லாத் கடுமையாக சாடியிருக்கிறார்.

மேலும், நீ இப்படி ஆடை அணிவதால் தான், மாணவிகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் பள்ளிக்கு லெக்கின்ஸ் அணிந்து வந்தது தவறு என்றும் கண்டித்திருக்கிறார். அனைவருக்கு மத்தியில் தன்னை தலைமை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த போன ஆசிரியை சரிதா ரவீந்திரநாத், இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். அதில், புடவை அணியும் ஆசிரியர்கள் நல்லவர்கள் என்றும், லெக்கின்ஸ் மற்றும் டாப்ஸ் அணிபவர்கள் கெட்டவர்கள் என்றும் நினைக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.



புடவையை விட சுடிதார் பாதுகாப்பானது என தெரிவித்த ஆசிரியை சரிதா, கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், பல்வேறு சிக்கலை சந்தித்து கொண்டு பள்ளிக்கு வந்து பாடம் நடத்தும் தங்களிடம், லெக்கின்ஸ் ஒரு பிரச்சனை என்று சொல்வது வெட்கக்கேடானது என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பலர் ஜீன்ஸ் அணிந்து வருகின்றனர். அவர்களின் உடைகளை எல்லாம் கேள்வி கேட்காமல் தன்னிடம் இப்படி நடந்து கொண்டது முறையா என்று சரிதா கேள்வி எழுப்பியுள்ளார். உடை தொடர்பாக ஆசிரியை தலைமை ஆசிரியை இடையேயான இந்த மோதல் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MALAPURAM KERALA SCHOOL TEACHER WEARING LEGGINGS MALAPURAM TEACHER MALAPURAM SCHOOL DRESS CODE ISSUE கேரளா ஆசிரியை சரிதா மல்லப்புரம் பள்ளி ஆசிரியை சரிதா லெக்கின்
Whatsaap Channel
விடுகதை :

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?


விடுகதை :

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


விடுகதை :

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next