கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில் தற்போது சீனாவில் புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவைச் சேர்ந்த டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர் ரவி, “இந்தியாவை பொறுத்தவரை பிஎஃப்.7 வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே அறிகுறிகள் தென்படும்” என்று தெரிவித்தார்.
இந்த புதிய வைரஸானது லேசான வடிவத்தில் மாறியுள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், “இந்தியர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்கள்.
மேலும், பிஎஃப் 7 வைரஸ் அதிகரித்தால் அதனை கொரோனா பெருந்தொற்றும் அலை என்ற சொல்லால் வரையறுக்க முடியாது. ஒரு அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து உச்சத்தை தொட்டு மீண்டும் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!