Tamil News & polling
பணகுடி : நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று அதிகாலையில் காரியாகுளத்தில் உள்ள இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.இதேபோன்று செந்தில்குமார் வீட்டின் அருகே உள்ள விவசாயி அருண்குமார் என்பவரது வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாயின. கார் பாதி எரிந்து கருகியது. இது குறித்து அருண்குமார் அளித்த புகார் அளித்தார்.அதன் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress