திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார் அண்ணாமலை! அமீர் குற்றச்சாட்டு

ஏப்ரல் 18, 2023 | 05:10 am | views : 1702
விமல் நடித்துள்ள குலசாமி திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு
விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர்,
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர் தெரிவித்ததாவது..
Also read... முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
” சென்சார் செய்யப்பட்ட பிறகு படத்திற்கு தடை சொல்வது ஏற்புடையது அல்ல.
திரைப்படம் மூலம் அரசியல் விழிப்புணர்வு செய்ய வேண்டுமே தவிர அரசியல்
கலவரங்களை செய்யக் கூடாது.
தனி மனித விமர்சனத்தை யார் முன்வைத்தாலும் ஏற்புடையது அல்ல. முத்துராமலிங்க தேவர் வேறு பெரியார் வேறு. இருவரும் இருவேறு தளத்தில் இருப்பவர்கள் அவர்களை ஒப்பிடவே கூடாது.
ஏப்ரல் 14 அன்று எல்லாரும் போல நானும் ஆர்வமாக இருந்தேன் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவார் என்று . ஆனால் அவர் வருமானவரித்துறை அதிகாரி
போன்று சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுத்தது தான். இதில் எதுவும் புதியது இல்லை.
தவறான கருத்தை பரப்பி தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அண்ணாமலை திட்டம். நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் மத்தியில் இதை கொண்டு செல்ல நினைத்தார்கள். ஆனால் எனக்கு தெரிந்து அது புஸ்வானமாக மாறிவிட்டது.
ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தது எனக்கு வருத்தம் தான். அமைதியாக நடந்ததா இல்லையா
என்பது முக்கியம் இல்லை. இந்த பேரணியால் மக்களுக்கு என்ன பயன். ஆனால் வட
நாட்டில் ஏன் கத்தி வேல் உடன் வருகின்றனர். இது தொடக்கம் தான் இதை வைத்து தான்
அடுத்து மீண்டும் நடத்துவார்கள்” என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
![]() |
![]() |
![]() |
![]() |
ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,
தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;
2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்
முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன?
மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்..
நான் பேட்டி எடுத்த பல
பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்
9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்
திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..
உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு