INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

தந்தையின் நண்பர் என்ற போர்வையில் அத்துமீறல்: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர்

தந்தையின் நண்பர் என்ற போர்வையில் அத்துமீறல்:  சிறுமியை பலாத்காரம் செய்து  வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர்
ஜூலை 29, 2023 | 06:50 am | Views : 53

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது56). ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ஜோதிடராக இருந்து வருகிறார்.

பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதால் அந்த பகுதியில் பிரபலமாக இருந்திருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் வைக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அவர்களது வீட்டுக்கு சுதர்சனன் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.ஜோதிடரின் நண்பருக்கு 15 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். தந்தையின் நண்பர் என்பதால் ஜோதிடரின் வீட்டுக்கு சிறுவன்-சிறுமி இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவரையும் ஜோதிடர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.அவர்களும் வழக்கம் போல் ஜோதிடரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது சிறுவனை இறைச்சி வாங்கி வருமாறு கூறி வீட்டில் இருந்து வெளியே ஜோதிடர் அனுப்பியிருக்கிறார். சிறுவன் சென்றபிறகு, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.அதனை குடித்த சிறுமி சிறுது நேரத்தில் மயங்கி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமியை தனது வீட்டுக்குள் தூக்கிச்சென்ற ஜோதிடர் சுதர்சனன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றிருந்த சிறுவன் திரும்பிவந்ததும், அறையில் இருந்த சிறுமியை மயக்கம் தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஜோதிடர் சுதர்சனன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. அதனை காண்பித்து சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஜோதிடர் மிரட்டியதால், அதுபற்றி தனது பெற்றோர் உள்ளிட்ட யாருக்கும் சிறுமி தெரிவிக்காமல் இருந்துள்ளார்.ஆனால் ஜோதிடரின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்துள்ளது.
இதனால் உடலளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனது நிலை குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். அதனை அவர்கள், சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியின் தாயை அழைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், ஜோதிடர் சுதர்சனனிடம் சென்று கேட்டுள்ளனர்.அப்போது தன்னிடம் உள்ள சிறுமியின் படுக்கையறை படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சைல்டுலைன் அமைப்பு மற்றும் வைக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஜோதிடர் சதர்சனனை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.தந்தையின் நண்பர் என்பதை பயன்படுத்தி சிறுமியிடம் ஜோதிடர் சுதர்சனன் அத்துமீறியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Keywords: GIRL MOLESTED ASTROLOGER ARREST சிறுமி கற்பழிப்பு ஜோதிடர் கைது

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


விடுகதை :

தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 1 day ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 4 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.