முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற ஒரே பெயரில் அழைக்கக்கோரி 11.9.1995-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
தேவர் என்ற பெயரில் அழைக்கப்படாததால் கள்ளர், அகமுடையார் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் உள்ளனர். எனவே, கள்ளர், மறவர், அகமுடையார் கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாகியும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தை நீதிமன்றம் பூர்த்தி செய்ய முடியாது. மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளனர்.
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!