எடப்பாடி பழனிச்சாமியின் பிரதமர் வேட்பாளர் யார்? - டிடிவி தினகரன் கேள்வி

எடப்பாடி பழனிச்சாமியின் பிரதமர் வேட்பாளர் யார்? - டிடிவி தினகரன் கேள்வி

  ஏப்ரல் 09, 2024 | 02:34 am  |   views : 63


கோவை ராமநாதபுரம் பகுதியில் அம்மா முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். அண்ணாமலை நன்கு படித்தவர், சிறந்த உழைப்பாளி, இரவு, பகல் பாராது மக்களுக்காக உழைக்கக் கூடியவர். நேர்மையாளர், கொள்கை பற்று மிக்கவர். என்னுடன் இன்று இராமநாதபுரம் கூட்டத்திற்கு வர வேண்டும் என அண்ணாமலை முயற்சி செய்தும், அவர் மற்ற இடங்களுக்கு பிரச்சாரம் செல்ல வேண்டி இருப்பதால் வர முடியவில்லை.





பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்ததற்கு காரணமே, அண்ணாமலையின் அணுகுமுறைதான். நாங்கள் இலட்சியத்திற்காக எப்பொழுதும் பின்வாங்காதவர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி மீண்டும் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு அண்ணாமலையை சந்தித்த போது ஆதரவு தெரிவித்திருந்தோம். தமிழகத்தில் நாம் அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும் என நிபந்தனையற்ற ஆதரவு தருகிறேன் என்று சொல்லி இருந்தேன். அமமுக கட்சியினர் சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளவர்கள். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தவர்களின் பட்டியலை கொடுத்து விட்டேன்.



ஒரு கூட்டணி அமைக்கும் போது அதில் பல கட்சிகளை சேர்க்க வேண்டியிருக்கும் என்பதால், பல சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டணியை இறுதி செய்யும்போது பல அழுத்தங்கள் வரும் என்பதை உணர்ந்தவன். எனது குறிக்கோள் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி மெகா கூட்டணியாக அமைய வேண்டும். அதில் பல கட்சிகள் வரவேண்டும். அதற்காக முயற்சி செய்யுங்கள் என்று தெரிவித்து இருந்தேன். அதன்படியே தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமைந்திருக்கிறது. பாஜகவுடன் 12 கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் மோடி பிரதமராக வர இருக்கின்றார். அவருக்கு தமிழகத்தில் இருந்து வெற்றியை தர வேண்டும் என்பதற்காக நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம்.



Also read...  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு




நாங்கள்தான் அம்மாவின் உண்மையான கட்சி, எங்களிடம் தான் புரட்சித் தலைவர் தந்த சின்னம் இருக்கிறது என தம்பட்டம் அடிக்கின்ற சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை? அவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா? அவர்கள் யாரை பிரதமராக சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக மோடியை சொல்கிறோம். ஸ்டாலின் இருக்கும் கூட்டணிக்கு இப்போது யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? எடப்பாடி இருக்கும் கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? ஸ்டாலினுக்கு பயந்து கொண்டு அதிமுகவினர் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக கள்ளக் கூட்டணி அமைத்திருக்கின்றனர். நான்கரை ஆண்டுகள் பழனிச்சாமி ஆட்சியில் இருந்த போது பல்வேறு முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது.



முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் இருக்கிறது. கொடநாடு கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதுபோன்ற நிலையில் தங்கள் மீது வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பழனிச்சாமி மறைமுகமாக திமுகவிற்கு உதவி செய்கிறார். மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக அரசினை மக்கள் வெறுக்க துவங்கி விட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது. திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த வாக்குகளை பிரிப்பதற்காக திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து அண்ணா திமுக போட்டியிடுகிறது. மோடிக்கு இணையான பிரதமர் வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை” எனத் தெரிவித்தார்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 2 days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 2 days ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 6 days ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 1 week ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 1 week ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 1 week ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 1 week ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 1 week ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என