தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன.
மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய பாடல் இன்று வரை பலரது பிளே லிஸ்டில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. திரை துறையில் கலக்கி வந்த அவர் அலைபாயுதே, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்த கார்த்திக் குமாரர் 2005 ல் திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் 2016ல் ஹேக் செய்யப்பட்ட அவர் ட்விட்டர் பக்கம் சுசீ லீக் என்ற பெயரில் அவர் திரை வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் புரட்டிப் போட்டது. சுசீ லீக் என்ற பெயரில் திரை நட்சத்திரங்கள் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சைக்கு கிளப்பியது.
இதனால் பாடகி சுசித்ராவின் இசை வாழ்க்கை பரிபோனதுடன் கணவர் கார்த்திக்கையும் விவாகரத்து செய்தார். இந்த சம்பவம் தமிழ் திரை துறையில் கரும்புள்ளியாக சுற்றிவரும் நிலையில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் தவறான உறவில் இருந்ததாக நேர்காணல் ஒன்றில் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் தான் ஓரினச் சேர்க்கையாளராக இருந்திருந்தால் அதனை பெருமையுடன் ஏற்றுக் கொண்டிருப்பேன் என பேசி பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது மட்டும் இன்றி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்தும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தனது திருமண உறவில் உண்மையாக இருந்ததில்லை எனக் கூறியுள்ளார். மேலும் சுஜி லீக்ஸ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நண்பர்களால் செய்யப்பட்ட பிராங்க் என்றும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது கோலிவுட் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S