INDIAN 7

Tamil News & polling

பிறந்தநாள் விழா - தேடல் முடிவுகள்

உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் - அமமுக அறிவிப்பு சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை

விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம்

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை : தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேசியதாவது; எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களால்தான் நான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். இது நான் நினைத்துப்பார்க்காத இடம். 2026க்கான வெற்றி விழாதான் இந்த பிறந்தநாள் விழா. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் 4 நாட்கள் பொதுக்கூட்டம் சென்னை, அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கட்சி

அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு ஈரோடு, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இருந்து வருகிறார். மேலும் இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும். தற்போது கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன், ஈரோடு புறநகர்

எடப்பாடி பழனிசாமி ஓ.கே. சொன்னால் அதிமுகவிற்கு பணியாற்ற நான் தயார்- விஜயபிரபாகரன் தேனி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரியகுளத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தே.மு.தி.க. கட்சியின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் பின்னணி...! ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ள அடுத்த நபரான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் போலீஸில் சிக்கியது எப்படி, ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமனுக்கு இருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பிரச்னைகள் என திகைப்பூட்டும் தகவல்களின் பின்னணியைப் பார்க்கலாம்... பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 22 ஆவது நபராக கைது செய்யப்பட்டிருப்பது, அஸ்வத்தாமன்.

தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி! தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது. பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்