தோல்வியிலும் சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்!

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூன் 27, 2024 வியாழன் || views : 299

தோல்வியிலும் சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்!

தோல்வியிலும் சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்!

டிரினிடாட் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணயானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது :

தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதோடு இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியிருந்தாலும் அந்த அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலக கோப்பை தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மட்டும் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் இந்த சாதனையை முறியடிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.


ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. அதேபோன்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் பட்சத்தில் அந்த போட்டியிலும் அவர் விக்கெட்டை கைப்பற்றினால் அவர் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

AFG VS RSA FAZALHAQ FAROOQI RECORD T20 WORLDCUP ஆப்கானிஸ்தான் டி20 உலககோப்பை பசல்ஹக் பரூகி
Whatsaap Channel
விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


விடுகதை :

டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


விடுகதை :

100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?


இருட்டு கடை அல்வாவை சுவைத்த முதல்வர்!

இருட்டு கடை அல்வாவை சுவைத்த முதல்வர்!


குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்


உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!

உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!


வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !

வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !


டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next