டிரினிடாட் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணயானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது :
தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அதோடு இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியிருந்தாலும் அந்த அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலக கோப்பை தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மட்டும் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் இந்த சாதனையை முறியடிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. அதேபோன்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் பட்சத்தில் அந்த போட்டியிலும் அவர் விக்கெட்டை கைப்பற்றினால் அவர் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநி மலையைச் சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்
இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!