501 ரன்கள், 400 ரன்கள் என தன் கிரிக்கெட் பயணத்தில் உடைக்கவே முடியாத சாதனையை வைத்திருக்கும் பிரையன் லாரா, இரண்டு இந்திய வீரர்களால் அதனை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அதிகம் டெஸ்ட் விளையாடாத ஏதோ சாதாரண அணிக்கு எதிராகவெல்லாம் இல்லை, ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 400 ரன்களுடன் நாட்அவுட் என்ற வரலாற்று சம்பவம் செய்தது உலக சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான்.
778 நிமிடங்கள் களத்தில் நிலைத்து நின்று 43 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 400 ரன்கள் நாட் அவுட் என விளையாடிய போது, இங்கிலாந்து அணியில் மேத்யூ ஹோக்கர்டு, ஸ்டீவ் ஹர்மிஸ்ஸன், ஆண்ட்ரோ பிளிண்டாஃப் என தலைசிறந்த பவுலர்கள் இருந்தனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேத்யூ ஹைடன் அடித்த 385 ரன்கள் சாதனையை, இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்கள் அடித்து சம்பவம் செய்த பிரையன் லாரா, 20 வருடங்களாக உடைக்க முடியாமல் இருந்துவரும் தன்னுடைய சாதனையை இரண்டு இளம் இந்திய வீரர்களால் உடைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
400 ரன்கள் என்ற இமாலய சாதனை குறித்து தி டெய்லி மெய்லுடன் பேசியிருக்கும் லாரா, “எனது காலகட்டத்தில் 400 ரன்கள் சாதனையை உடைக்குமளவு சவால் விட்ட அல்லது குறைந்த பட்சம் 300 ரன்களைக் கடந்த வீரர்கள் இருந்தனர். அதில் வீரேந்திர சேவாக், கிறிஸ் கெய்ல், இன்சமாம்-உல்-ஹக், சனத் ஜெயசூர்யா போன்ற வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான வீரர்களாக இருந்தனர்.
ஆனால் தற்போது எத்தனை ஆக்ரோஷமான வீரர்கள் விளையாடுகிறார்கள்? என்று பாருங்கள், குறிப்பாக இங்கிலாந்து அணியில் சாக் க்ராலி மற்றும் ஹாரி புரூக் முதலிய வீரர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இந்திய அணியில்? யாராவது முறியடிப்பார்களானால் அது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில். இந்த இரண்டு வீரர்களுக்கும் சரியான சூழ்நிலை அமைந்தால், அவர்களால் என் சாதனையை முறியடிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்கள் நாட் அவுட் மட்டுமில்லாமல், கவுண்ட்டி கிரிக்கெட்டில் 501 ரன்கள் நாட் அவுட் என அடித்திருக்கும் பிரையன் லாரா, இரண்டுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்தார். முதலில் 365 ரன்களை உடைத்த அவர், அதற்குபிறகு 385 ரன்களை உடைத்து சாதனை படைத்தார். கடைசியாக ஒரு வீரர் 350 ரன்களை கடந்தது 2006ம் ஆண்டில் மஹிலா ஜெயவர்தனே 374 அடித்ததே கடைசியாக இருந்துவருகிறது.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!