Tamil News & polling
கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் உள்ளது.வயநாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் 350-ஐ கடந்துள்ளது.
மேலும் மாயமான 200-க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் என பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி வயநாடு நிலச்சரிவு குறித்து எச்சரித்தது வெளிவந்துள்ளது.பள்ளி மாணவி எழுதிய கதையில், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்தார்கள் என்றும், 200- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது பற்றியும் தெரிவித்துள்ளார்.
மழை பெய்தால் நிலச்சரிவுகள் அருவியைத் தாக்கும். மனித உயிர்கள் உள்பட அவர்களின் பாதையில் உள்ள அனைத்தையும் அது மூழ்கடிக்கும் என அந்த மாணவி கடந்த ஆண்டு தனது பள்ளி இதழில் எழுதிய கதையில் குறிப்பிட்டுள்ளார்.
கதை எழுதிய மாணவியின் நகரமான சூரல்மலை தரைமட்டமாகியது. அவரது பள்ளியும் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டது . வயநாடு நிலச்சரிவு குறித்து ஒரு ஆண்டுக்கு முன் எழுதி எச்சரித்த மாணவியின் கதை தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress