கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தற்போது குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் குரங்கு அம்மை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் குரங்கு அம்மை நோய் (Mpox) அறிகுறிகளுடன் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ( AIIMS ) வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குரங்கு அம்மை குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், குரங்கு அம்மை ஒரு வைரஸ் ஜூனோசிஸ் என்றும் இது பெரியம்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் தீவிரம் குறைவு என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, கொப்பளங்கள், குளிர், சோர்வு மற்றும் சிறப்பியல்பு தோல் புண்கள் ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை நோயாளிகளை தனிமைப்படுத்த ஐந்து படுக்கைகள் நியமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உறுதியான சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படும் வரை மற்ற நோயாளிகள் மற்றும் ஊழியர்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றம் தெரிவித்துள்ளது.
நோய் தொற்று பாதிப்பு சந்தேகத்திற்கு உரியவர்கள், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஃப்தர்ஜங் மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும், புதிய அவசரநிலைப் பிரிவில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கு அம்மை பெருந்தொற்றை கடந்த வாரம்தான் சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. மேலும் இந்த குரங்கு அம்மை தொற்று பரவுவதைத் தடுக்க அதிக விழிப்புணர்வு, விரைவான அடையாளம் மற்றும் கடுமையான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது.
எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் குரங்கு அம்மையை கையாள்வதற்கான வழிமுறைகளை அந்நிறுவனத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், சொறி, அல்லது உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் உடனடி பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
RML மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா, குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 படுக்கைகள் கொண்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவம் மற்றும் தோல் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரண்டு நோடல் அதிகாரிகள் நிலைமையை மேற்பார்வையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!