Tamil News & POLLING

 

உலகை மிரட்டும் குரங்கு அம்மை.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது எய்ம்ஸ்!

1 year ago 21 ஆகஸ்ட் 2024 11:39 AM | views : 143
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தற்போது குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் குரங்கு அம்மை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் குரங்கு அம்மை நோய் (Mpox) அறிகுறிகளுடன் சந்தேகிக்கப்படும் நோயாளிகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ( AIIMS ) வெளியிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குரங்கு அம்மை குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், குரங்கு அம்மை ஒரு வைரஸ் ஜூனோசிஸ் என்றும் இது பெரியம்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் தீவிரம் குறைவு என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, கொப்பளங்கள், குளிர், சோர்வு மற்றும் சிறப்பியல்பு தோல் புண்கள் ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை நோயாளிகளை தனிமைப்படுத்த ஐந்து படுக்கைகள் நியமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உறுதியான சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படும் வரை மற்ற நோயாளிகள் மற்றும் ஊழியர்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றம் தெரிவித்துள்ளது.


நோய் தொற்று பாதிப்பு சந்தேகத்திற்கு உரியவர்கள், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஃப்தர்ஜங் மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும், புதிய அவசரநிலைப் பிரிவில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கு அம்மை பெருந்தொற்றை கடந்த வாரம்தான் சர்வதேச பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. மேலும் இந்த குரங்கு அம்மை தொற்று பரவுவதைத் தடுக்க அதிக விழிப்புணர்வு, விரைவான அடையாளம் மற்றும் கடுமையான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது.

எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் குரங்கு அம்மையை கையாள்வதற்கான வழிமுறைகளை அந்நிறுவனத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், சொறி, அல்லது உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் உடனடி பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

RML மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா, குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 படுக்கைகள் கொண்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவம் மற்றும் தோல் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரண்டு நோடல் அதிகாரிகள் நிலைமையை மேற்பார்வையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS சீமான் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் கனமழை தமிழகம் PMK INDIAN CRICKET TEAM பாமக UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி CONGRESS EDAPPADI PALANISWAMI கொலை வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் SEEMAN KEERTHY SURESH NELLAI அமமுக தமிழ்நாடு கள்ளக்காதல் TAMIL ACTRESS COIMBATORE தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM கோவை OPS திருநெல்வேலி THOOTHUKUDI ELECTION COMMISSION மதுரை கொரோனா பாலியல் தொல்லை தேவர் நாம் தமிழர் கட்சி ஓபிஎஸ் நெல்லை தீபாவளி தமிழக அரசு ASSEMBLY ELECTIONS AJITH திருமாவளவன் THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் விடுமுறை TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் MADURAI வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங்