INDIAN 7

Tamil News & polling

தொடர் விடுமுறை - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... ஸ்தம்பித்த சென்னை

06 செப்டம்பர் 2024 11:58 AM | views : 122
Nature

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை தினங்களையொட்டி, சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி விடுமுறை தினமாகும். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மக்கள் ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை சீர் செய்யுமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் (26 வயது). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த ஷேக், முகப்பேர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்த



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்