இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

By Admin | Published in செய்திகள் at அக்டோபர் 24, 2024 வியாழன் || views : 495

இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ விமான நிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆகாசா விமான நிறுவனத்தின் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் கடந்த 11 நாள்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில், விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையினருடனும் பேசி வருகிறோம். அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.

விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு வேண்டுமென்றே போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை, இனி வாழ்நாள் முழுக்க விமானத்தில் பறக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன..இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சில விமானங்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.


இது தொடர்பாக, தில்லி காவல்துறை 8 தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறது. இதுபோன்ற போலியான மிரட்டல்களை விடுவோரைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் நாடியுள்ளனர். இந்த சம்பவங்களால், நாட்டின் விமானப் போக்குவரத்து, கடுமையான பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இதுபோன்ற மிரட்டல்களால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன, சில ரத்து செய்யப்பட்டன. .

FLIGHT BOMB THREATS
Whatsaap Channel
விடுகதை :

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


விடுகதை :

தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?


கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை


தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு


ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்


ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்


பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next