சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அத்துடன் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
புகார் அடிப்படையில் சென்ன எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். தவைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முன்ஜாமினை நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையே தலைமறைவானதால் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடிவந்தனர். தனிப்படை போலீசாருக்கு கஸ்தூரி ஐதராபாத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐதரபாத்திற்கு சென்று கஸ்தூரியை கைது செய்தனர்.
ஐதராபாத்தில் ககைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S