INDIAN 7

Tamil News & polling

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயம்

16 நவம்பர் 2024 04:25 PM | views : 130
Nature

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமானவர்கள். மீனவர்கள் உதவியுடன் போலீஸார் படகில் சென்று தேடி வருகினறனர்.

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சி.ஏ. படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சயத்ரியாஸ் (18), இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக உள்ளார். இவர்கள் 2 பேரும் தனது நண்பர்களான 1 பெண் உள்ளிட்ட 5 பேருடன் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நண்பர்கள் 5 பேரும் மாமல்லபுரம் மீனவர் பகுதி கடலில் குளித்துள்ளனர்.






கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கி கிரீஷ், ரியாஸ் இருவரும் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டனர். உடன் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரும் தங்கள் கண் எதிரில் கிரீஷ், ரியாஸ் இருவரும் கடலில் அடித்து செல்லப்பட்டதை கண்டு துடித்து அழுதனர். பிறகு தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று மாயமான கிரீஷ், ரியாஸ் இருவரின் உடலை தேடி வருகின்றனர்.



Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில்

Image சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்