கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் சுமார் 36 கிராம பஞ்சாயத்துகளும் அது சார்ந்த கிராமங்களும் உள்ளன.
இந்த பகுதியில் ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து இதற்கு அனுமதி கோரி கடந்தவாரம் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் கொடியேற்று விழா நடத்த அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதுபற்றி நிர்வாகிகள் கேட்டதற்கு இன்று, நாளை என்று தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றுவது என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை ஒன்றிய த.வெ.க. தலைவர் அருண்பிசாத், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றினார்கள். தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்று விழாவுக்கு முறைப்படி அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தனர்.
பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும். வீடுகளில் ஏற்ற அனுமதி தேவை இல்லையே என எண்ணி எங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றியுள்ளோம். இதுவரை சுமார் 2 ஆயிரம் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது என்றனர்.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!