INDIAN 7

Tamil News & polling

வரலாற்றை திரித்து படம் எடுப்பதில் வெற்றிமாறன் கில்லாடி - ப்ளூ சட்டை மாறன்

01 டிசம்பர் 2024 04:25 PM | views : 81
Nature

விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக ட்ரைலரில் "தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்" என்று ஒரு வசனம் விஜய் சேதுபதி பேசுவது போல இடம்பெற்றிருக்கும். முதலில் இது நடிகர் விஜயை தாக்கி வைக்கப்பட்ட வசனம் என்று நம்பப்பட்டது. இருப்பினும் இது எம்ஜிஆரை தாக்கி அவர் வைத்த வசனம் என்று கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். மேலும் உயர்வான தத்துவங்களைக் கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா? இல்லையென்றால் தத்துவமே இல்லாவிட்டாலும் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் பிறருக்கு தானம் செய்பவர் உயர்ந்த தலைவரா? இன்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது .

விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 2:

கதை நடக்கும் காலகட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் என தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துள்ளாராம் வெற்றிமாறன். இதில் விஜயசேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' கேரக்டர்.

தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மற்றுமே உருவாக்க முடியும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது எனும் வசனம் வருகிறது.

இது விஜய்யை குறிப்பதாக கூறினர். ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம் பல முரணான‌ கொள்கை தத்துவங்கள் உள்ளன.

இந்த வசனம் எம்..ஜி.ஆரை கிண்டல் செய்கிறது. நமக்கு ஒரே கேள்விதான். உயர்வான தததுவங்களை கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா அல்லது தத்துவம் இல்லாவிட்டாலும்.. சொந்த உழைப்பில் சம்பாதித்த தனது சொத்துக்களை பிறருக்கு தானம் செய்தவர் உயர்ந்த தலைவரா?

உங்கள் ஹீரோ பெருமாள்.. தன் மக்கள் விடுதலைக்கு போராடியபோது.. உதவிக்கரம் நீட்டியது எம்.ஜி.ஆர் என்பதை படத்தில் பதிவு செய்துள்ளீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா?

இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் .

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்