INDIAN 7

Tamil News & polling

பேசினால் பிரச்சனை உருவாகனும், கலகம் ஏற்படனும் - சீமான் தடாலடி

By E7 Tamil 06 ஜனவரி 2025 04:19 PM
Nature

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வரிகளெல்லாம் எங்கே. 10-க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே.

திராவிடநல் திருநாடு இங்கே ஏன் வருகிறது? திராவிடம் என்ற சொல் என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருத வார்த்தை வருகிறதா? இல்லையா? தமிழ்த்தாய் வாழ்த்தில் என்ன திராவிடம் வருகிறது. திராவிட நாடு எங்கிருந்தது? உங்கள் வசதிக்கு திராவிட நாடு என்ற வார்த்தை வந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தாய் ஆக்கிட்டீங்க.

நான் அதிகாரத்திற்கு வந்தால் எங்க தாத்தா புரட்சி பாவலர் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாய் போடுவோன். அந்த பாட்டை போட்டுக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்க.

அரசு விழாவில் நீங்கள் போடாமல் இருங்க... இது பொது நிகழ்வு... புத்தக வெளியீட்டாளர்கள். பதிப்பாளர்கள் அமைப்பு அரசு கொடுக்கிற பணத்தில் இயங்குகிறது என்றால், அரசுக்கு காசு ஏது? என்னை கண்டிக்கிறீர்கள் இல்லையா? என்னுடைய காசு அதில் இருக்கிறதா? இல்லையா? நான் பேசும்போது முன்னாடி இருந்து கைத்தட்டினார்களே அவர்களடைய காசு இருக்கிறதா? இல்லையா? தமிழன் காசுதான் இருக்கிறது?

நான் இங்கிலீஷ் தாய் வாழ்த்து பாட்டு போட்டேனே? இந்தி தாய் வாழ்த்து போட்டேனா? தமிழ்த்தாய் வாழ்த்துதானே போட்டேன்... தூயத் தமிழில் எங்கள் புரட்சி பாவலர் பாடிய பாடலை போட்டேன். ரவீந்திரநாத் தாகூர் பாட்டை போட்டேனா? அப்படி ஒன்னும் இல்லலா...

உங்களுக்கு என்ன பிரச்சனை. அந்த பாட்டை போட்டதால் கொட்டகை பற்றி எரிந்ததா? பல பேர் இறந்து போய் விட்டார்களா? அப்படி ஏதும் இருக்கா?

நான் பேசிவிட்டு இறங்கிய பிறகு, கலைஞர் கின்னஸ் என்ற நூலை வெளியிட்டீங்களே... அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் எல்லோரும் வெளியிட்டு பேசினார்கள். நானாவது கொஞ்சம் இலக்கியம் பேசினேன். நீங்கள் முழுவதும் அரசியல் பேசினீர்கள். அது என்னது எனச் சொல்லுங்கள்...

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?

எனக்கு மட்டுதான் கண்டனம் தெரிவிக்க முடியும் (உங்களுக்கு மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு). நான் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனையா தெரியுது... கண்டனம் வரவில்லை என்றால், அரைநாள் செலவழித்து மேடையில் ஏறி நான் ஏன் பேசனும்... வினையாற்றாத சொல் வீண். பேசினால் ஒரு பிரச்சனை உருவாகனும், ஒரு பிரளயம் ஏற்படனும், ஒரு கலகம் ஏற்படனும். சும்மா போய் நான் ஏன் பேசனும். அது வேற யாராவது பேசுவாங்க...

தமிழ்தேசம், தமிழ்தேசியம் என புத்தகத்தில் உள்ளது. தமிழ்தேசியத்தை முன்னெடுக்கும் மகன் இதைக்கூட பேசவில்லை என்றால், நான் கைத்தடி வைத்திருக்கிறேனா? துப்பாக்கி வைத்திருக்கிறேனா.

கைத்தடி வைத்திருக்கிறவன் தட்டி தட்டி நடக்கிறார். நான் துப்பாக்கி வைத்திருக்கிறவன். இரண்டு குண்டாவது வெடிக்கனும். இல்லையென்றால் அந்த நிகழ்ச்சியில் நான் ஏன் கலந்துக்கனும். இப்படி நடக்கும் என தெரிந்துதான் நிகழ்ச்சி நடந்திருக்கு. இல்லை என்றால் என்னை ஏன் கூப்பிட்டு வெளியிடனும்?

எல்லோரும் அரசியல் பேசுறாங்கள். நான் பேசியது தான் பிரச்சனையா இருக்குது.

இவ்வாறு சீமான் பேட்டியின்போது தெரிவித்தார்.

பேசினால் பிரச்சனை உருவாகனும், கலகம் ஏற்படனும் - சீமான் தடாலடி1



Whatsaap Channel


Image சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஐபிஎஸ் ஆக

Image சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களையும்

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்