INDIAN 7

Tamil News & polling

இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்

By E7 Tamil 23 மே 2025 11:07 AM
Nature

ஜப்பானில் 54 வயதான கார் டிரைவர் ஒருவர் போதைபொருட்கள் கொடுத்து 50 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு இவரது காரில் டோக்கியோவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரிடம் நைசாக பேச்சுகொடுத்தார். பின்னர் இரட்டை அர்த்தத்தில் பேசி அந்த பெண்ணிற்கு கார் டிரைவர் தூக்க மாத்திரையுடன் போதைப்பொருளையும் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் சுயநினைவு இழந்தார்.

உடனே அவர் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவர் செல்போனில் வீடியோ எடுத்தார். இதேபோல அவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல பெண்களுக்கு இதேபோன்று இரட்டை அர்த்தத்தில் பேசி, போதை பொருட்கள் கொடுத்து அவர்கள் கற்பை சூறையாடியது தெரிய வந்துள்ளது. வீடு மட்டுமல்லாது தனது காரில் வைத்தும் பல பெண்களை அவர் சீரழித்து உள்ள விவரம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

மொத்தம் 50 இளம்பெண்கள் கார் டிரைவர் வலையில் சிக்கி தங்கள் கற்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் கார் டிரைவரின் செல்போன் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கார் டிரைவர் ஏராளமான பெண்களை கற்பழித்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பெண்ணுக்கு அவர் போதைபொருள் கொடுத்து ரூ.23 ஆயிரம் கொள்ளையடித்ததற்காக அவரை கைது செய்து இருந்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் மாதம் இளம்பெண்ணை கற்பழித்ததாக கைது செய்யப்பட்ட பின்னர்தான் கார் டிரைவரின் இந்த மோசமான செயல் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image டோக்கியோ, ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக



Whatsaap Channel


சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி


திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட சிரமம்

திருச்செந்தூர்: கடல் அரிப்பால் பக்தர்கள் புனிதநீராட


ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி

ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு


அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே கேட்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத நாங்குநேரி ரெயில்வே


அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்

அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை அதிமுக அண்ணாமலை Chennai Annamalai தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாஜக Tamil Nadu திருமாவளவன் MK Stalin ADMK BJP சீமான் தவெக மாநாடு AIADMK Thirumavalavan TTV Dhinakaran இந்திய அணி மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam TVK Conference தமிழக வெற்றிக்கழகம் AMMK வானிலை ஆய்வு மையம் indian cricket team Seeman Northeast Monsoon தீபாவளி Sengottaiyan PMK அன்புமணி ராமதாஸ் மழை Anbumani Ramadoss Rain நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன் திருச்செந்தூர் Thoothukudi VCK காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் Tirunelveli தவெக விஜய் தென்காசி பாமக GetOut Stalin M.K. Stalin பிரதமர் மோடி அமரன் வானிலை IMD TVK Vijay விசிக நடிகை கஸ்தூரி Edappadi Palaniswami பாலியல் தொல்லை திருநெல்வேலி Nellai Congress விடுமுறை நெல்லை மதுரை தமிழகம் கோலிவுட் திமுக அரசு இந்தியா GetOut Modi Ind vs Nz Udhayanidhi Stalin Nainar Nagendran சட்டசபை தேர்தல் Ajith rain தனுஷ் Tiruchendur வாஷிங்டன் சுந்தர் கைது Washington Sundar தூத்துக்குடி Heavy Rain