சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும்.
* கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
* அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்.
* அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் எனது பங்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S