INDIAN 7

Tamil News & polling

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்களை நியமிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

By E7 Tamil 09 டிசம்பர் 2025 04:06 PM
Nature

மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது.இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் - பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-ன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப் பாளராக நியமிக்கப்படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். ஜனவரி 15-ந்தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்களை நியமிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது; பைக் பறிமுதல்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது; பைக்


புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால்


தேசிய தடகள போட்டியில் திசையன்விளை மாணவி சாதனை!

தேசிய தடகள போட்டியில் திசையன்விளை மாணவி


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக சென்னை தமிழக வெற்றிக் கழகம் கனமழை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu Thirumavalavan AIADMK சீமான் BJP எடப்பாடி பழனிசாமி தவெக மாநாடு இந்திய அணி தீபாவளி வடகிழக்கு பருவமழை முக ஸ்டாலின் indian cricket team Seeman வானிலை ஆய்வு மையம் TTV Dhinakaran தமிழ்நாடு செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தமிழக வெற்றிக்கழகம் TVK Conference AMMK PMK மு.க.ஸ்டாலின் Northeast Monsoon Sengottaiyan உதயநிதி ஸ்டாலின் Rain Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் மழை காங்கிரஸ் Edappadi Palaniswami பிரதமர் மோடி VCK தென்காசி தவெக விஜய் பாமக வானிலை IMD விடுமுறை Udhayanidhi Stalin GetOut Stalin நயினார் நாகேந்திரன் திருச்செந்தூர் Tirunelveli அமரன் மதுரை கைது Ind vs Nz TVK Vijay பாலியல் தொல்லை Thoothukudi நடிகை கஸ்தூரி விசிக கோலிவுட் டிடிவி தினகரன் தூத்துக்குடி M.K. Stalin தனுஷ் Congress rain திமுக அரசு Washington Sundar வாஷிங்டன் சுந்தர் GetOut Modi திருநெல்வேலி தமிழக அரசு Heavy Rain தமிழகம் இந்தியா Nainar Nagendran சட்டசபை தேர்தல் Ajith