135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை ..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..

135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை ..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..

  அக்டோபர் 01, 2021 | 06:08 am  |   views : 1668


திருச்சியில் 135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை அமைக்க இடம் தேர்வு..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..



பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், மொத்தம் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கிறது, அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வழங்கி இருந்தார்.



இந்நிலையில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கும் அதே திருச்சி மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்கும் பணியை முக்குலத்தோர் அமைப்புகள் தொடங்கியுள்ளது. இது குறித்து அனைத்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி.





Also read...  பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

இது குறித்து திருமாறன் ஜி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது, இந்தியாவின் சுதந்திர தினம் கருப்பு தினம் என்றும், தொடர்ந்து ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு தமிழகத்தில் சிலை அமைக்கப்பட இருக்கும் நிலையில், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் தேவர் அவர்களுக்கு திருச்சியில் அமைய இருக்கும் பெரியார் சிலையை விட உயரமாக சிலை அமைக்கப்படும்.





திருச்சியில் 150அடி உயரத்தில் பசும்பொன் தேவர் சிலை அமைய இருக்கும் வளாகத்தில் நூலகம், பொழுது போக்கு பூங்கா, பசும்பொன் தேவர் குறித்த அருங்காட்சியம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தெரிவித்த திருமாறன் ஜி, இதற்காக தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், முக்குலத்தோர் அமைப்புகளை சந்தித்தும் பேசி வருவதாகவும், அனைவரும் அதற்கான ஆதரவை தெரிவித்து வருவதாக கூறினார்.



மேலும் திருச்சியில் தேவர் சிலை அமைய இருக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக, இந்த வாரம் திருச்சி சென்று ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்த பின்பு, இடத்தை தேர்வு செய்யும் பணியை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 150அடி உயரத்தில் அமைய இருக்கும் தேவர் சிலைக்கான செலவுகளை முக்குலத்தோர் அமைப்புகள் ஒன்றிணைத்து ஏற்று கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.









ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!

2023-09-09 02:35:20 - 2 weeks ago

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..! ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது; 2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்


முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?

2023-09-21 04:25:08 - 2 days ago

முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன? தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன? மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.. நான் பேட்டி எடுத்த பல


பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

2023-09-20 14:27:50 - 2 days ago

பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை! அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம் 9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்


திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!

2023-09-20 16:42:13 - 2 days ago

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை! ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு