சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கம்?

சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கம்?

  அக்டோபர் 11, 2021 | 09:35 am  |   views : 1781


சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்டவிரோதமாக உடைத்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது அக்கூட்டத்தில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்தார்.





Also read...  பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


அதேபோல் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசினார். இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.



சாட்டை துரைமுருகனை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மநாபபுரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் உத்தரவிட்டுள்ளார்.





அதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் நாங்குநேரி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது 143, 153, 153A, 505 (2), 506 (1), 269 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சாட்டை துரைமுருகன் 3 வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





இந்நிலையில், அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




அதில், “தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு செல்வதை கண்டித்து நேற்று (10.10.2021) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.





அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் போக்கோடு பொய்யாக குற்றம் சாட்டி, வழக்கு புனைந்து சிறைப்படுத்தி இருக்கும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்கமுடியாது.



சாட்டை துரைமுருகனின் தற்போதைய சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரை கைவிட்டது போல கட்சியின் கடிதத்தாளை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும்.



இத்தருணத்தில் அவர் இவ்வழக்கில் இருந்து மீண்டு வரவும் சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாக துணை நிற்கும் என தெரியப்படுத்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.



மேலும், சாட்டை துரைமுருகன் கைதிற்கு சீமான் ஏன் நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் உள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில், “ஒருவேளை வழக்கு பாயலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்” என பேச்சு அடிபடுகிறது






எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 1 day ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக


ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை

2024-05-07 06:37:01 - 1 day ago

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. சாத்தான்குளம் தனியார் கல்லூரியில் ரூபி மனோகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை திசையன்விளை அருகே உள்ள தமது வீட்டின் அருகே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக


ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

2024-05-07 04:36:06 - 1 day ago

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த


இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

2024-05-06 13:03:36 - 2 days ago

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது. தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை


நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன்

2024-05-06 12:58:30 - 2 days ago

நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தற்போது விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை!

2024-05-06 05:12:05 - 2 days ago

காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை! காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு


பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

2024-05-06 04:58:04 - 2 days ago

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

2024-05-06 04:57:12 - 2 days ago

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார்.