சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.
அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" என்ற பெயரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார். இது தொடர்பாக சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரோடும் உறவோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
தீய ஆட்சி முறை ஒழிய தூய ஆட்சி முறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க ஜனநாயகம் மலர அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி எப்போதும் வெல்லும். நமது வெற்றி அதை சொல்லும். திருச்சியில் திரள்வோம். தீந்தமிழ் இனத்தீரே.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களை காக்கும் வகையில் மலைகள், மரங்களின் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான் தற்போது மக்களின் மாநாட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S