இரு நாட்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லி சென்று இருந்தார். முதலில் ஜெய்லர் படம் தொடர்பாகவே அவர் டெல்லி சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே 75வது விழா சுதந்திர தின விழா தொடர்பாக அவர் டெல்லி சென்றது தெரிய வந்தது. அதாவது, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கா மத்திய அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களைக் கொண்டு குழு ஒன்றை அமைத்து.
இந்த குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே நடிகர் ரஜினி டெல்லி சென்று தெரிய வந்தது. இந்தச் சூழலில் இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினி சந்தித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் ரஜினிகாந்த்- ஆளுநர் சந்திப்பு தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75ஆவது சுதந்திர தின விழா அடுத்த வாரம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்கான நிகழ்ச்சி தொடர்பாக இருவரும் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S