அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இதை எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாக சரவணன் அறிவித்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கியது பாஜக.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தற்போதைய மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசுவது போன்று ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசும் நபர், மற்றொருவரிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கேட்டு, அனைவரையும் வர சொல்லுமாறு கூறுகிறார். மேலும் அந்த நபர், மாசாக பண்ண வேண்டும். கிராண்டாக பண்ண வேண்டும். வேறு மாதிரி பண்ணுவோம். இதை எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பண்ணிவிடுவோம் என்று கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வீடியோ குறித்து அண்ணாமலை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!