நடிகர் சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக, அவருடன் படுக்கையை பகிரவும் தயாராக இருப்பதாக நடிகை ஒருவர் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். இதையடுத்து தெலுங்கில் பிசியான அவர், அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாலும், தமிழிலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து, கார்த்திக் சுப்புராஜின் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் ஜிகர்தண்டா, சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற அவருடன் படுக்கையை பகிரவும் தயாராக இருப்பதாக நடிகை ஒருவர் கூறி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான காயத்ரி ரமா தான் இப்படி ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டு உள்ளார்.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்து பல்வேறு நடிகைகள் மீடூ புகார் அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா ஹீரோயின்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரமா அட்ஜஸ்மெண்ட்டுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அட்ஜஸ்மெண்ட் செய்வது தவறில்லை என்றும் அது அவரவரின் விருப்பம் என்றும் பேசியுள்ள அவர், தனக்கு நடிகர் சித்தார்த் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற யாரேனும் படுக்கையை பகிர சொன்னாலும், அதை செய்ய தயாராக இருப்பதாக கூறி உள்ளார் காயத்ரி ரமா. அவரின் இந்த பேச்சு தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக வலைதளங்களில் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!